செய்திகள்
விபத்து காயம்

வல்லம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம்

Published On 2020-02-12 10:22 GMT   |   Update On 2020-02-12 10:22 GMT
வல்லம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள திருமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது45). விவசாயியான இவர் நேற்று முன்தினம் திருமலை சமுத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாப்பிள்ளை நாயக்கன்பட்டிக்கு சென்றார். அப்போது மாப்பிள்ளை நாயக்கன் பட்டி சாலையில் வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்தாஸ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல நேற்று தஞ்சை விளார் ரோடு பாத்திமா நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் காரில் மருங்குளம் தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மருங்குளத்தை சேர்ந்த பிரேம்குமார், அறிவழகன் ஆகியோர் காரின் முன் பகுதியில் மோதி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கார் உரிமையாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News