செய்திகள்
கோப்பு படம்.

செய்யாறு கோவிலில் கொள்ளை- போலீசார் விசாரணை

Published On 2020-02-06 11:44 GMT   |   Update On 2020-02-06 11:44 GMT
செய்யாறு கோவிலில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்யாறு:

செய்யாறு ஆற்காடு ரோட்டில் பைங்கினர் பகுதியில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. விநாயகர், அம்மன், முருகர், பிரதான வாயிலில் ஒரு உண்டியல் என மொத்தம் 4 உண்டியல்கள் உள்ளன. இரவில் மர்ம நபர்கள் விநாயகர் சன்னதி முன் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள விளையாட்டு மைதான வாயில் முன்பு உண்டியலை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவில் குருக்கள் கார்த்திக் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் கோவில் அருகில் இருந்த உண்டியலை எடுத்து முருகன் சன்னதி முன் போலீசார் எடுத்து வந்து வைத்துள்ளனர்.

மேலும் உண்டியல் உடைத்த மர்ம நபர்கள் குறித்தும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News