செய்திகள்
ஊத்தங்கரை அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள தகரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 9-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி அன்று அவர் தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அந்த பெண்ணின் தாயார் நேற்று ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.