search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young lady missing"

    • திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22)

    திருச்சி

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் சந்தியா (வயது 16) சம்பதவன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை ரெங்கராஜ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

    திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மகன் காதர் உசேன் (வயது 22) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் வேலை தேடி செல்கிறேன் என்று கூறி சென்றவர் நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சமீர் அகமது அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காதர் உசேனை தேடி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள ெகாண்டமநாயக்கன்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தமிழ்செல்வி(21).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.

    இதனால் தமிழ்செல்வி கோவித்துக்கொண்டு கோகிலாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வெளியே சென்றவர் மாயமானார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • திருமணம் நிச்சயம் ஆன நிலையில் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகள் காவியா(21). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடைக்கு சென்ற காவியா திடீரென மாயமானார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • துர்கா ( வயது 23). பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து வந்தார்.
    • இந்த நிலையில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்–பட்டி சுவர்ணாம்பிகை செட் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் துர்கா ( வயது 23). பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23- ந் தேதி பிற்பகல் 2 மணி அளவில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான துர்காவை தேடி வருகின்றனர்.

    ×