செய்திகள்
கூடலூரில் பைக்கில் கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி கைது - 22 கிலோ பறிமுதல்
கூடலூரில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி 2 பேர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து சென்றனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் வந்த 2 பேர்கள் போலீசாரைக் கண்டதும் தனது வாகனத்தை வேகமாக ஓட்டினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 20வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகன்துரை என்பவரது மகன்கள் செல்வம் (வயது 34), வசந்த் (வயது 30)எனத் தெரியவந்தது. போலீசார் இவர்களிடமிருந்து சாக்கு பையை பிரித்து சோதனை செய்த போது அதில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் 2 பேர்களையும் கைது செய்து 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்டுபடுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்கு இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டது. இந்த கடத்தலுக்கு தொடர்பு உடையவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து சென்றனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் வந்த 2 பேர்கள் போலீசாரைக் கண்டதும் தனது வாகனத்தை வேகமாக ஓட்டினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 20வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகன்துரை என்பவரது மகன்கள் செல்வம் (வயது 34), வசந்த் (வயது 30)எனத் தெரியவந்தது. போலீசார் இவர்களிடமிருந்து சாக்கு பையை பிரித்து சோதனை செய்த போது அதில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் 2 பேர்களையும் கைது செய்து 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்டுபடுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்கு இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டது. இந்த கடத்தலுக்கு தொடர்பு உடையவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.