செய்திகள்
மாயம்

கும்பகோணம் அருகே குழந்தையுடன் சென்ற தாய் மாயம்

Published On 2020-01-22 12:49 GMT   |   Update On 2020-01-22 12:49 GMT
கும்பகோணம் அருகே உறவினர் வீடுகளுக்கு சென்று வருவதாக குழந்தையுடன் சென்ற பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி இவரது மனைவி கிரித்திகா (வயது 24), இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 15-ந் தேதி உறவினர் வீடுகளுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு குழந்தையுடன் சென்ற கிரித்திகா மீண்டும் வீடு திரும்பவில்லை. 

அவரது கணவர் கிரித்திகாவின் உறவினர் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை என தெரியவந்தது. 

இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் ஈஸ்வரமூர்த்தி புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News