செய்திகள்
தற்கொலை

ஏர்வாடி அருகே பெண் தற்கொலை

Published On 2020-01-11 10:12 GMT   |   Update On 2020-01-11 10:12 GMT
ஏர்வாடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரத்தை சேர்ந்தவர் முருகன், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மாலதி, கூலி தொழிலாளி. மாலதி தனது சகோதரி வேலம்மாளிடம் கடன் வாங்கியிருந்தார். அதனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் மனம் உடைந்த மாலதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News