செய்திகள்
கைது

கள்ளப்பெரம்பூர் அருகே மதுவிற்ற வாலிபர் கைது

Published On 2020-01-05 10:33 GMT   |   Update On 2020-01-05 10:33 GMT
கள்ளப்பெரம்பூர் அருகே மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள தென்னங்குடியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் சிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் தென்பெரம்பூர் சாலையில் சென்று கண்காணித்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் தென்னங்குடியை சேர்ந்த சேகர்(48) என தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News