செய்திகள்
கோப்புப்படம்

திருச்செங்கோட்டில் 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை

Published On 2020-01-02 10:16 GMT   |   Update On 2020-01-02 10:16 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் எண்ணப்பட்டன

முதலில் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 118 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் 96 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. விண்ணப்ப படிவம்-17 இணைக்காததால் இந்த 96 வாக்குகளும் செல்லாது என அதிகாரிகள் அறிவித்தனர். மீதமுள்ள 22 வாக்குகளும் செல்லுபடிதக்கவை என தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் அதிக தபால் ஓட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News