செய்திகள்
மதுரையில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கார்த்திகா (வயது23) சத்திரப்பட்டி போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, மணிகண்டன் மகன் அழகு ராஜா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்வதாக கூறியதால் நெருங்கி பழகினேன்.
இதனால் கர்ப்பமானேன். இதனை கூறி திருமணம் செய்ய கேட்டபோது அழகுராஜா மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி அழகு ராஜா மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.