செய்திகள்
பெண் தற்கொலை

உவரியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

Published On 2019-12-09 11:09 GMT   |   Update On 2019-12-09 11:09 GMT
உவரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி மரிய மாலினி (வயது30). இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மரிய மாலினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அவரது உறவினர் தோப்புவிளை அந்தோணி சகாயம் உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News