செய்திகள்
கைது

அம்பை அருகே கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2019-11-27 11:38 GMT   |   Update On 2019-11-27 11:38 GMT
அம்பை அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

அம்பை அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் ராமலெட்சுமி என்ற பாத்திமா (வயது53). இவர் கஞ்சா விற்பதாக ஆழ்வார் குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழ ஆம்பூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாத்திமா வாட்டர் டேங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News