செய்திகள்
கொள்ளை முயற்சி

திருவையாறு அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

Published On 2019-11-26 12:29 GMT   |   Update On 2019-11-26 12:29 GMT
திருவையாறு அருகே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவையாறு:

திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டையில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். நேற்று மாலை வேலை முடிந்து வங்கி பூட்டப்பட்டது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். ஜன்னலை உடைத்து வங்கிக்குள் ஏறி குதித்தனர். பின்னர் பணம், நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை உடைக்க முயன்றனர்.

ஆனால் முடியாததால் வங்கிக்குள் வேறு எங்காவது பணம் வைக்கப்பட்டுள்ளதா? என நோட்டமிட்டனர். எங்கும் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் கொள்ளையர்கள் வந்த வழியாக சென்றனர். இந்த நிலையில் இன்று காலை வங்கிக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் ஜன்னல் உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சியடைந்தனர். பொருட்கள் சிதறி கிடந்தன. லாக்கரை உடைக்க முடியாததால் பணம், நகை தப்பியது தெரியவந்தது.

இது குறித்து திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வங்கியை பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மற்றும் அதன் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். கொள்ளையடிக்க முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News