செய்திகள்
கோப்பு படம்

களக்காட்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-11-23 14:02 GMT   |   Update On 2019-11-23 14:02 GMT
களக்காட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி (வயது 25). இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் களக்காடு கோவில்பத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த சுமதி நேற்று வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News