search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young women suicide"

    பேரூர் அருகே ஒருதலையாக காதலித்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடம் திருமணம் நடந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித் தொழிலாளி. இவரது மகள் தேவி (வயது 18). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்தநிலையில் அந்த வாலிபருக்கு வேறுறொரு பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதனால் தேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தேவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூலகுளத்தில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலகுளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆண்டனி ஜோசப். இவர் தனியார் பள்ளி ஒன்றில் கிளாக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜான்சி (வயது17). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் அவரது பாட்டிக்கு ஜான்சி உதவியாக இருந்து வந்தார். அதேவேளையில் ஜான்சி வீட்டு வேலை ஏதுவும் செய்வதில்லை என கூறப்படுகிறது.

    இதனை ஜான்சியின் தாய் பாக்யாபேட்ரிக் கண்டித்து வந்தார். அதுபோல நேற்று முன்தினம் மாலை வீட்டுவேலை எதுவும் செய்யாமல் ஜான்சி தூங்கினார். இதனை பாக்யா பேட்ரிக் கண்டித்து இதுபோல் படிக்காமல் தூங்கியதால்தான் தேர்வில் தோல்வி அடைந்ததாக ஜான்சியை திட்டினார்.

    இதனால் மனமுடைந்த ஜான்சி தற்கொலை கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை ஜான்சி பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஜான்சி சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த பாக்யாபேட்ரிக் வந்து பார்த்த போது மின்விசிறி கொக்கியில் ஜான்சி துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×