செய்திகள்
உண்டியல் உடைக்கப்பட்ட காட்சி.

ஆவடி அய்யப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2019-11-21 06:49 GMT   |   Update On 2019-11-21 06:49 GMT
ஆவடியில் உள்ள அய்யப்பன் கோவிலில் உண்டியிலை உடைத்து பணம் மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை:

ஆவடி பி.வி.புரத்தில் அய்யப்பன் கோவில் ஒன்று உள்ளது.

நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலையில் பூசாரி கோவிலை திறந்த போது அங்கிருந்த அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், கோவிலில் இருந்த பூஜை பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் கோவிலை பற்றி நன்கு அறிந்த நபர்கள்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News