செய்திகள்
கைது

பழனியில் விற்பனைக்கு வைத்திருந்த 195 மதுபாட்டில்கள் பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2019-11-12 09:02 GMT   |   Update On 2019-11-12 09:02 GMT
பழனியில் விற்பனைக்கு வைத்திருந்த 195 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
பழனி:

பழனி டவுன் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், பஞ்சலட்சுமி தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது திண்டுக்கல் சாலையில் தனியார் மருத்துவமனை அருகே மது விற்றதாக மதுரை புதூரை சேர்ந்த வினோத்ராஜா (வயது 27) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 75 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்துரோடு பகுதியில் மது விற்ற திண்டுக்கல் குரும்பபட்டியை சேர்ந்த முத்துக்குமார் (40) என்பவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அடிவாரம் பகுதியில் மது விற்றதாக பழனி தட்டான்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (29), அடிவாரம் பூங்காரோட்டை சேர்ந்த கருப்பையா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News