செய்திகள்
விபத்து

கோவையில் விபத்தில் 2 பெண்கள் பலி

Published On 2019-11-11 10:08 GMT   |   Update On 2019-11-11 10:08 GMT
கோவையில் விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கணபதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மங்கலம் (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் கணபதி செக்கன் தோட்டம் அருகே சென்றார். அப்போது நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த மங்கலம் கீழே விழுந்து மயங்கினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்கலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரஸ்வதி (74). சம்பவத்தன்று இவர் கோவை காந்திபுரம் சிக்னல் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சரஸ்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News