செய்திகள்
கொள்ளை

கரிக்கலாம்பாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-11-03 12:15 GMT   |   Update On 2019-11-03 12:16 GMT
வில்லியனூர் அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்திநகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது31). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அப்பகுதியில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளேசென்று கொள்ளையடிக்க முயன்றனர். அந்த வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் அருகில் இருந்த ஆசிரியர் முகுந்தன் வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் அலமாரியில் இருந்த ரூ.40ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பின்னர் கோவிலுக்கு சென்று திரும்பிய முகுந்தன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அலமாரியில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் இது குறித்து முகுந்தன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குபதிவு செய்து கொள்ளையில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News