செய்திகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் - அதிமுக
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்ற அ.தி.மு.க., வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் தேதிகளை தெரிவித்துள்ளது.
சென்னை:
காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் தேதிகளை இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரியில் வரும் 5-ம் தேதியும், விக்கிரவாண்டியில் வரும் 8-ம் தேதியும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.