செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்

Published On 2019-11-02 09:47 GMT   |   Update On 2019-11-02 09:47 GMT
விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பேரவை செயலாளர் உள்பட ஏராளமானோர் அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட பேரவை செயலாளர் சிந்துமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடேஷ் உள்பட ஏராளமானோர் அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News