செய்திகள்
சாலை விபத்து

மதுரை உசிலம்பட்டி அருகே லாரி, ஷேர் ஆட்டோ மோதி விபத்து - 6 பேர் பலி

Published On 2019-10-25 11:07 GMT   |   Update On 2019-10-25 11:07 GMT
மதுரை உசிலம்பட்டி அருகே லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து எழுமலை செல்லும் சாலையில் ஷேர் ஆட்டோ ஒன்றில் பள்ளி மாணவிகள் சிலர் இன்று மதியம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 மாணவிகள், குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் உட்பட மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News