செய்திகள்
மதுரை உசிலம்பட்டி அருகே லாரி, ஷேர் ஆட்டோ மோதி விபத்து - 6 பேர் பலி
மதுரை உசிலம்பட்டி அருகே லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து எழுமலை செல்லும் சாலையில் ஷேர் ஆட்டோ ஒன்றில் பள்ளி மாணவிகள் சிலர் இன்று மதியம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 மாணவிகள், குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் உட்பட மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.