செய்திகள்
மது குடிக்க பணம் தராததால் தாயை தாக்கிய மகன் கைது
ஆண்டிப்பட்டி அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தியாகராஜன் (வயது 39). மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி தனது தாய் ஆனந்தம்மாளிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த தியாகராஜன் தாய் என்றும் பாராமல் ஆனந்தம்மாளை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.