செய்திகள்
கோப்பு படம்

புளியந்தோப்பில் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2019-10-17 09:09 GMT   |   Update On 2019-10-17 09:09 GMT
புளியந்தோப்பில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 6-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்பவர் பட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த உமர், சமீர் ஆகியோர் வீட்ல் மாலா பொட்டலம், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் இவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News