செய்திகள்
விபத்து

தேவதானப்பட்டி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் பலி

Published On 2019-10-16 10:02 GMT   |   Update On 2019-10-16 10:02 GMT
தேவதானப்பட்டி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண் விபத்தில் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேவதானப்பட்டி:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது55). இவரது மனைவி சித்ரா (50). இவர்களது மகள் வீடு தேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் உள்ளது. அங்கு கோவில் விழா நடந்தது. இதற்காக கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல் மங்கலத்திற்கு சென்றனர்.

தேவதானப்பட்டி அருகே தென்குளத்துப்பட்டி மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சித்ரா சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக இறந்தார். ராமர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் காமக்காபட்டியை சேர்ந்த பால்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News