செய்திகள்
விபத்து

தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ராணுவ வீரர் தவறி விழுந்து பலி

Published On 2019-10-01 09:56 GMT   |   Update On 2019-10-01 09:56 GMT
தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்து போனார்.

பாகூர்:

தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் திருவரசன் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது52). முன்னாள் ராணுவ வீரர். இவர் வில்லியனூர் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் வேலை முடிந்தவுடன் தனது மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.

அபிஷேகப்பாக்கம் அருகே வந்த போது அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்காலில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

இது குறித்து ராமலிங்கத்தின் மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ராமலிங்கத்துக்கு காசியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

Tags:    

Similar News