செய்திகள்
தர்மபுரியில் மதுவிற்ற 4 பெண்கள் கைது
தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்களை கைதுசெய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ.பள்ளிப்பட்டி போலீசார் அதேபகுதியை சேர்ந்த ராணி, வசந்தா மற்றும் சாலா ஆகிய 3 பேரையும் அரசுக்குப் புறம்பாக மது விற்றதன்பேரில் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதேப்போன்று ஏரியூர் போலீசார் சகுந்தலா என்பவரை மது விற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் இவர்களிடமிருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.