search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested woman"

    குமரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 168 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருவட்டார்:

    மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, ஆகிய சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளத்தை அடுத்த வசந்தம் நகர் பகுதியில் வரும்போது, அங்கு முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் அதே பகுதியை அந்தோணி (வயது 67) என்பதும் அந்த பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தக்கலை மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தக்கலை பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக சுந்தரபாய் (47) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அனந்தபத்மனாபபுரம் பகுதியில் வரும்போது அங்கு பாடலிங்கம் என்ற துரை (43) அனுமதி இன்றி மது விற்பதாக அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் அப்பகுதியில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப் போது அருமனை பஜாரில் அனுமதி இன்றி மது விற்றதாக மனோகரன் (58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பூதப்பாண்டி, மார்த்தாண்டம், களியக்கா விளை, கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 168 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    குலசேகரம் பகுதியில் தனியார் மதுபான பார் உள்ளது. நேற்று காந்தி நினைவு தினத்தையொட்டி மது விற்க அரசு தடை விதித்திருந்த போதிலும் அங்கு விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் பாரின் அருகே மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளான தாக கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த நேரத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், காந்தி நினைவு தினத்தன்று மது விற்பனை செய்த பார் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    நெல்லை ரெயில் நிலையத்தில் பழப்பெட்டிகள் போல ரே‌ஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு இன்று அதிகாலை ஒரு எக்ஸ் பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் 6 பெண்கள் பழப்பெட்டிகளை ஏற்றி திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு பழங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சந்தேகம் அடைந்து பெட்டியை சோதனை செய்தார்.

    அப்போது மேலே மட்டும் பழங்களை அடுக்கி வைத்து விட்டு, உள்ளே ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அங்கு இருந்த அனைத்து பழப் பெட்டிகளிலும் மொத்தம் 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

    1.பழனியம்மாள் (47), 2.பூலம்மாள் (35), 3.உலகம்மாள் (35), 4.சுப்பு (50), 5.லட்சுமி (50), 6.கருப்பாயி (58). இவர்கள் அனைவரும் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லை குடிமை பொருள் பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எருமப்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    எருமப்பட்டி, 

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி(வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதி தனது 2-வது மகன் ஞானபிரகாசம் மற்றும் மகள் ராஜேஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 9-ந்தேதி காலை மகனும், மகளும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமராவதி அணிந்திருந்த 4பவுன் செயின், காதில் கிடந்த ¾பவுன் தோடு, பீரோவில் இருந்த 10பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமராவதி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஜோதி(31) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜோதி, அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் தேவிகா(34), மலையாளி மனைவி பூங்கோதை(35) ஆகியோர் சேர்ந்து நகைக்காக மூதாட்டி அமராவதியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், நகைகளை திருடியதும் தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.
    கள்ளக்காதலை கண்டித்ததால் கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து சகோதரர்களை கொன்றதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்தாட்சி மடத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் அய்யப்பன் (வயது22).

    இவர் தனது நண்பர்கள் காமராஜர் காலனி கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு (22), லிங்காபுரம் காலனி கவுதம் (15) மற்றும் சிலருடன் அங்குள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் மது அருந்தி உள்ளார்.

    பட்டாசு ஆலை தொழிலாளர்களான இவர்கள் விடுமுறை நாளில் ஒன்றாக கூடி மது அருந்துவது வழக்கம். நேற்று மது அருந்திய சிறிது நேரத்தில் கணேசன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் மேலும் 3 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களுடன் மது அருந்திய அய்யப்பன், ஜனார்த்தனன் (14), சரவணக்குமார் (23), அரிகரன் என்ற அந்தோணி (22) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் அந்தோணி தவிர மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் அய்யப்பனின் அண்ணன் முருகன் (27) அவரது வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.

    ஒரே நேரத்தில் 4 பேர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மது குடித்ததால் அவர்கள் இறந்ததாக தகவல் வெளியான நிலையில் சிவகாசி லிங்காபுரம் காலனியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை (எண்.11851) பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    காலாவதியான மது விற்கப்பட்டதா? அல்லது மதுவில் வி‌ஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர்.

    முதலில் இறந்த கணேசன் எடுத்த வாந்தியை பரிசோதனை செய்தபோது அதில் குருணை மருந்து கலந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மது அருந்திய 3 பேர் இறந்த நிலையில் வீட்டில் இருந்த முருகன் இறந்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் முருகனின் சகோதரி வள்ளி (33) சமைத்த கோழிக்கறியில் (சிக்கன் 65) குருணை மருந்து கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை சாப்பிட்டதுதான் 4 பேரின் சாவுக்கு காரணம் என தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் வள்ளியை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சகோதரர்களை கொலை செய்ய திட்டமிட்டு கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வள்ளியை கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    சிவகாசியில் செல்வம் (44) என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் பணியாற்றி வந்தேன். கணவரை பிரிந்து வாழ்ந்த எனக்கும், செல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து தெரிய வந்ததும் எனது தம்பிகள் முருகன், அய்யப்பன் கண்டித்தனர். இதுபற்றி செல்வத்திடம் தெரிவித்தேன். அவர் கூறியபடி முருகனுக்கு பிடித்த கோழிக்கறியில் குருணை மருந்தை கலந்தேன். பின்னர் நான் இருக்கன்குடி கோவிலுக்கு செல்வதாக முருகனிடம் கூறி விட்டு வெளியில் சென்று விட்டேன்.

    முருகன் தான் சாப்பிட்டதுபோக மீதமுள்ள கோழிக்கறியை நண்பர்களுக்கு கொடுத்துள்ளான். இதனை சாப்பிட்டதால்தான் மருந்து அருந்தியவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதில் கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் இறந்துள்ளனர். முருகன் வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வள்ளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவகாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து அச்சக அதிபர் செல்வத்தையும் கைது செய்தார்.

    இதற்கிடையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது (60), கருப்பையா (62), ரிசர்வ் லைன் சிவக்குமார் (28), விசுவநத்தம் கருப்பசாமி (33) ஆகியோர் மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் கருப்பசாமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பராசக்தி கலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.11848) மது வாங்கி அருந்திய இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×