search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirunelveli railway station"

    • பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது.
    • 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த பேய் மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. ரெயில் பாதை அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் தண்டவாளங்கள் தொங்கி கொண்டு இருக்கின்றன.

    இதனால் தென் மாவட்டங்களுக்கு ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லை, ரெயில் நிலையங்களை மையமாக கொண்டு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நின்றதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது.

    ரெயில் பாதையில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருவதால் தண்டவாளங்கள் மற்றும் பாதையை சீரமைத்து ரெயில்களை இயக்க போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் ரெயில் சேவை இன்றும் அந்த மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

    திருச்செந்தூர்-திருநெல்வேலி முன்பதிவில்லாத பயணிகள் சேவை இருமார்க்கமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மணியாட்சி-திருச்செந்தூர், திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-நாகர்கோவில், திருநெல்வேலி-தூத்துக்குடி, செங்கோட்டை-திருநெல்வேலி.

    தூத்துக்குடி-திருநெல்வேலி உள்ளிட்ட 16 முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து நேற்று திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று வழக்கம் போல நெல்லை ஜங்ஷன் வரை இயக்கப்பட்டது.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி குமரி எக்ஸ்பிரஸ் (06643), நாகர்கோவில்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை இயக்கப்பட்டது. திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

    இதேபோல திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் -திருநெல்வேலி இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
    • பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த பிறகு மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

    நெல்லை - செங்கோட்டை இடையே பயணிகள் ரெயில் சேவை, செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 97 ஆசியர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #JactoGeoStrike
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ சார்பாக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், ராஜசேகர், பவுல், பொன்னுசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 1200 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 42 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைதான ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

    இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JactoGeoStrike
    நெல்லை ரெயில் நிலையத்தில் பழப்பெட்டிகள் போல ரே‌ஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு இன்று அதிகாலை ஒரு எக்ஸ் பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் 6 பெண்கள் பழப்பெட்டிகளை ஏற்றி திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு பழங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று சந்தேகம் அடைந்து பெட்டியை சோதனை செய்தார்.

    அப்போது மேலே மட்டும் பழங்களை அடுக்கி வைத்து விட்டு, உள்ளே ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் அங்கு இருந்த அனைத்து பழப் பெட்டிகளிலும் மொத்தம் 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற 6 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

    1.பழனியம்மாள் (47), 2.பூலம்மாள் (35), 3.உலகம்மாள் (35), 4.சுப்பு (50), 5.லட்சுமி (50), 6.கருப்பாயி (58). இவர்கள் அனைவரும் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லை குடிமை பொருள் பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×