செய்திகள்
தற்கொலை

வெம்பாக்கத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-09-23 11:12 GMT   |   Update On 2019-09-23 11:12 GMT
வெம்பாக்கத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் மணிமேகலை (வயது 23). இவருக்கும் திருப்பனமூர் மேட்டு காலனி சேர்ந்த நல்ல சக்கரவர்த்தி மகன் மனு 26 என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து சில மாதங்கள் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிமேகலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிமேகலையின் தந்தை சாந்தகுமார் தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷாஜின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிமேகலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மணி மேகலைக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News