செய்திகள்
பேரூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி
பேரூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் கோபால் (வயது 22). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. நேற்று இவர் தனது மொபட்டில் கோவை- சிறுவாணி ரோட்டில் செல்லப்ப கவுண்டன் புதூர் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.