செய்திகள்
கொள்ளை

மதுரை பெண்ணிடம் 8 பவுன் நகை-பணப்பை திருட்டு

Published On 2019-09-21 09:06 GMT   |   Update On 2019-09-21 09:06 GMT
மதுரை பெண்ணிடம் 8 பவுன் நகை-பணப்பை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை வில்லாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 65). சென்னை சென்றுவிட்டு தனியார் டிராவல்ஸ் மூலம் மதுரை வந்தார்.

மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இறங்கிய விஜயலட்சுமி ‘தனது டிராவல் பேக்‘ மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கீரைத்துறை போலீசில், விஜயலட்சுமி புகார் செய்தார். அதில், மாயமான பையில் ஆப்பிள் ஐ போன் ஹார்டு டிஸ்க், 8 பவுன் நகை, ரூ.47 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News