செய்திகள்
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் 34 கோவிலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள சிவபெருமான் என்பவர் வீட்டில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவர் வேலை முடிந்ததும் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். அப்போது தொட்டிக்கு மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரனுக்கும் மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்னர்.
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் 34 கோவிலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள சிவபெருமான் என்பவர் வீட்டில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவர் வேலை முடிந்ததும் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். அப்போது தொட்டிக்கு மேல் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரனுக்கும் மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்னர்.
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.