செய்திகள்
கோப்பு படம்

முக ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

Published On 2019-09-18 12:28 GMT   |   Update On 2019-09-18 12:28 GMT
முக ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியவர் மீது மார்த்தாண்டம் போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம்:

குழித்துறை நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆசாத்அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒருவர் முகநூலில் அவதூறு பரப்பியிருந்தார். மேலும் இந்திக்கு எதிராக யாரேனும் வீதியில் வந்து போராடினால் அவர்களை கொலை செய்வேன் என பதிவிட்டுள்ளார். எனவே எங்களது கட்சிக்கும், கட்சி தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ள அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

குழித்துறை நகரத் தலைவர் பொன் ஆசைத்தம்பி, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், ஒன்றிய பொறுப்பாளர் ஜாண்பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News