செய்திகள்
மாயம்

களியக்காவிளை அருகே இளம்பெண் கைக்குழந்தையுடன் மாயம்

Published On 2019-09-18 09:01 GMT   |   Update On 2019-09-18 09:01 GMT
களியக்காவிளை அருகே இளம்பெண் கைக்குழந்தையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

களியக்காவிளை அருகே மரியகிரி பகுதியை சேர்ந்தவர் வினில். இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று வினில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தை மாயமாகி இருந்தனர். அதிர்ச்சி அடைந்த வினில் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தார்.

மேலும் மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால், இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News