செய்திகள்
கைது

சமயநல்லூர் அருகே மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2019-09-16 09:54 GMT   |   Update On 2019-09-16 09:54 GMT
சமயநல்லூர் அருகே மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

சமயநல்லூரை அடுத்த கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் சோழவந்தான் அருகேயுள்ள ஒட்டுப்பச் சேரியில் வசிக்கும் சிறுமியை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தார். அந்த சிறுமி சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி சம்பவத்தன்று காலை கரட்டுப்பட்டியில் வசிக்கும் சித்தி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவரை அஜித்குமார் நடுவழியில் மறித்து கடத்திச் சென்றாராம். அதன் பிறகு ‘நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று வாக்குறுதி அளித்தவர், மாணவியின் எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News