search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பாலியல் பலாத்காரம்"

    சேத்தியாத்தோப்பு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 7-ம் வகுப்பு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சம்பவத்தன்று இரவு மாணவி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திலகர் மற்றும் ஜெய்சங்கர் அந்த மாணவியை தாக்கி, அங்குள்ள மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவளை பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அவள் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாள்.

    அந்த சிறுமியை பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தாள். பின்னர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மயக்கம் தெளிந்த பின்னர் அந்த மாணவியிடம், அவளது பெற்றோர் எதற்காக வி‌ஷம் குடித்தாய்? என்று விசாரித்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி கதறி அழுதாள்.

    இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் ஆகிய 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே பாடம் நடத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் பிசியோதெரபிஸ்ட். இவர் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் மன உளைச்சலில் இருந்ததால் அவரது தாயார் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது மாணவி, தங்கவேல் பலாத்காரம் செய்ததை தாயிடம் கண்ணீர் விட்டு அழுது கூறியுள்ளார்.

    இதனால் அதிர்சியடைந்த அவரது தாயார் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கவேல் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பு என்கிற சுரேந்தர் (வயது 18). மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (18).

    இவர்கள் 2 பேரும் கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை வெளியே சொல்ல கூடாது என அந்த மாணவியை 2 வாலிபர்களும் மிரட்டினர். இதில் பயந்து போன மாணவி இதை பற்றி யாரிடமும் கூறவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி தனக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாக அவரது பெற்றோரிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

    இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இது குறித்து மயிலம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் சுப்பு என்கிற சுரேந்தர், ராஜன், ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது தந்தை நடத்தும் கடைக்கு சென்றிருந்தார். கடையில் சிறுமி தனியாக இருந்தாள்.

    அப்போது அங்கு வந்த அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லாணை பகுதியை சேர்ந்த ராம்குமார் (32) என்பவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி, தாயிடம் கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராம்குமாரை கைது செய்தனர்.

    நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் தனியார் நர்சிங் கல்லூரியில் 17 வயது சிறுமி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கல்லூரி முடித்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தார். இந் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மலைராஜ் (27) வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில், மாணவி யின் தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மலைராஜ் கைது செய்யப்பட்டார்.

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு 4 நாள் போலீஸ் காவலும், இருவருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்யதனிப்படை அமைத்து தேடி வந்தனர். 



    மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

    இதற்கிடையே, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷு உள்பட 3 பேரை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில் முக்கிய குற்றவாளியான நிஷுவுக்கு 4 நாள் போலீஸ் காவலும், டாக்டர் சஞ்சீவ் மற்றும் தீன்தயாள் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது. #Rewari #RewariRapeCase 
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றனர். 

    இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் பங்கஜ், மனீஷ், நிஷு உள்பட 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

    இந்நிலையில், ரேவாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷுவை சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். #Rewari #RewariRapeCase 
    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர்.

    பிறகு மாணவியை ஜமுனாமரத்தூர் முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அந்த 4 சிறுவர்களும் அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், சிறுமியை மிரட்டி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதையடுத்து, யாரிடமும் தங்களை பற்றி கூறக்கூடாது என மாணவியை சிறுவர்கள் மிரட்டினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதுப்பற்றி சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் ஒரு சிறுவன், அத்திப்பட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். #Tamilnews
    கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    ×