செய்திகள்
கோவை அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
கோவை அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று இரவு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த வாலிபர் யார்.? எந்த ஊரைச் சேர்ந்தவர்.? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.