செய்திகள்
நாசரேத்தில் மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
நாசரேத்தில் தகராறில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நாசரேத்:
நாசரேத் திருமறையூரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மகேஷ் (வயது 36) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜான்சி ஏஞ்சலின் (29). மகேஷ் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காததால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேபோல் நேற்றும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், மனைவியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜான்சி ஏஞ்சலின் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மகேசை கைது செய்தனர்.