செய்திகள்
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி மீன் மார்க்கெட் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மீன் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மீன் மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி தென்னூர் பட்டா பிராமன் பிள்ளை தெரு சங்கீதபுரத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது62) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.