செய்திகள்
தற்கொலை

தவளக்குப்பம் அருகே ஆசிரியை தூக்கில் தொங்கினார்

Published On 2019-09-10 14:18 GMT   |   Update On 2019-09-10 14:18 GMT
தவளக்குப்பம் அருகே ஆசிரியை தூக்கில் தொங்கினார். கணவர் வீட்டார் அடித்து கொலை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகலிங்கம். இவர், காட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சீத்தாபிரியா (வயது 29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சீத்தா பிரியா நோணாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கனகலிங்கத்துக்கும், சீத்தா பிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சீத்தாபிரியா வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் சீத்தாபிரியாவை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீத்தாபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

சீத்தாபிரியா இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது  சீத்தாபிரியாவின் தந்தை நடராஜன் தனது மகளை அவரது கணவர் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டதாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் தவளக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News