search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை தற்கொலை"

    • கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கல்நாடு அரமங்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தாஜுதீன். இவரது மனைவி ரூபினா (வயது 30). இவர்களது மகள் நயனா மரியம் (5). இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூபினா மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் திடீரென மாயமாகினர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடினார்கள். அப்போது அவர்களது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தாய், மகள் ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பரம்பா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டனர். ரூபினா தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ரூபினா அந்த பகுதியில் உள்ள விளையாட்டு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவருக்கு குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ரூபினா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மகனை கவனித்துக் கொள்ளுமாறு குடும்பத்தினரை கேட்டு கொண்டுள்ளார்.

    கிணற்றில் குதித்து மகளுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசர்கோடு பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரிபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது39). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 43). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா (38). ஆசிரியை. இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    அனிதா திருப்பத்தூர் குனிச்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 10 ஆண்டாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா இன்று அதிகாலை ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவர் திடீரென அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்தார். இதில் அனிதா தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அனிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி கோனப்பெண்ட் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சித்தேஸ்வரன் என்ற 4 வயதில் மகன் உள்ளான்.

    இந்த நிலையில் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியை தேவி தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடி 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை தேவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதுநிலை பட்டதாரியான ராதிகா திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
    • ஆசிரியை தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராதிகா (வயது26). முதுநிலை பட்டதாரியான இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ராதிகா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×