search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
    X

    அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

    • மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரிபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது39). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×