search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
    X

    திருப்பத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

    • சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 43). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா (38). ஆசிரியை. இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    அனிதா திருப்பத்தூர் குனிச்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 10 ஆண்டாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா இன்று அதிகாலை ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவர் திடீரென அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்தார். இதில் அனிதா தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அனிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×