மதுரையில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை
மதுரை:
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது 67). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனவேதனையில் இருந்த சங்கரம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சிம்மக்கல் அனுமார்படித்துறையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது32). கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தல்லாகுளம் பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் இந்திரா தெருவை சேர்ந்தவர் சையது மக்தூன் (வயது 45). கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வேலைக்கும் செல்லவில்லை. எனவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
வாழ்க்கையில் விரக்தியடைந்த சையது மக்தூன் புதுநத்தம் ரோடு உழவர் சந்தை பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.