செய்திகள்
இளம்பெண் மாயம்

வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

Published On 2019-09-07 10:16 GMT   |   Update On 2019-09-07 10:16 GMT
வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகும். கடந்த ஒரு வருடமாக வெள்ளகோவிலில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (26). இவரும் சுரேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

கடந்த 8 வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஓவியா (7), நவநீத கிருஷ்ணன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

தமிழ்செல்வி கடந்த 3 மாதங்களாக வெள்ளகோவில் முத்தூர் சாலையில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார்.

இது குறித்து அவரது கணவர் சுரேஷ் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தமிழ் செல்வியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News