செய்திகள்
தற்கொலை

கீழக்கரையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-09-04 11:17 GMT   |   Update On 2019-09-04 11:17 GMT
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீழக்கரை:

கீழக்கரை பட்டாணி அப்பா தர்கா பகுதியைச் சேர்ந்தவர் புகாரி அகமது (வயது 39). இவரது மனைவி பாத்திமா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மலேசியாவில் புகாரி அகமது வேலை பார்த்து வந்தார். அங்கு விசா இல்லாததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் கீழக்கரை திரும்பினார். இங்கு வந்தது முதல் அடிக்கடி மது அருந்தி வந்ததால் புகாரி அகமதுவுக்கும், அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரை புகாரி அகமது அறை கதவு திறக்கப்படவில்லை. அவரது மகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது புகாரி அகமது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News