செய்திகள்
மரணம்

வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி லாட்ஜ் உரிமையாளர் பலி

Published On 2019-09-03 10:07 GMT   |   Update On 2019-09-03 10:07 GMT
வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் லாட்ஜ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகில் உள்ள பங்களாபட்டி நூத்துலாபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது58). இவர் போலீஸ் நிலையம் எதிரே லாட்ஜ் வைத்து நடத்தி வந்தார். மேலும் நிலக்கோட்டை பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அணைப்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் நோக்கி வந்த ஒரு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தார். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News