செய்திகள்
விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் - வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, மும்பை, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் காலை முதல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து, மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் பிரபலமான லால்பவுச்சா ராஜா சிலைக்கு மக்கள் வழிபாடுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் பிள்ளையார்ட்டி, திருச்சி மலைக்கோவில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலிலும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.