செய்திகள்
கைது

மகாராஜகடை அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2019-08-27 14:24 GMT   |   Update On 2019-08-27 14:24 GMT
மகாராஜகடை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் கே.பூசாரிபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதில் அரசு அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்து. 

இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கடத்தி வந்த கே.பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த குமரேசன்(42), சுரேஷ்(30), பச்சையப்பன்(50) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மணல் கடத்த பயன்படுத்திய லாரி, 2 ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News